உள்நாடு

கோழி இறைச்சி விற்பனையில் பாரிய மாற்றம்

மக்களுக்கு போதுமான வருமானம் இல்லாததால், நாட்டில் தினசரி கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஒரு நாளைக்கு 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்போது 500 மெற்றிக் தொன் இறைச்சியே விற்பனையாகின்றது.

கோழி இறைச்சிக்கான தேவை குறைந்து வருவதால், இறைச்சி மற்றும் முட்டையின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கோழி மற்றும் முட்டை விலைகள் குறைந்துள்ளதால், கோழி பண்ணை உரிமையாளர்கள் தங்கள் உற்பத்தி செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related posts

கோட்டாபய அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

கண்டி நகருக்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor

காணாமற்போன தினுர’வின் சடலம் மீட்பு