உள்நாடு

கோள் மண்டல காட்சி கூடம் செவ்வாயன்று திறப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோள் மண்டல காட்சி கூடத்தினை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் கே. அருணு பிரபா பெரேராவினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி முதல் சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கோள் மண்டல காட்சிகள் சமூக இடைவெளி சட்டத்திற்கேற்ப வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்

editor

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் விளக்கமறியலில்