உள்நாடு

(UPDATE) கோப் குழுவில் இருந்து தயாசிரி, இரான், மரிக்கார் இராஜினாமா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்னவும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்திருந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரும் தனது கோப் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் இருந்து (கோப்) இராஜிநாமா செய்ய தீர்மானித்துள்ளார். அதன்படி தனது இராஜிநாமா கடிதத்தை சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

அரச சேவையை ஒன்லைனுக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிரான சிறந்த தீர்வு – ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி

editor

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

editor