உள்நாடு

கோதுமை மாவின் தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இருந்து கோதுமை மாவு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவாக அதிகரித்தால், 450 கிராம் பாண் ஒன்றின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படுமென உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையைத் தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நுகர்வோர்கள் மட்டுமின்றி தாங்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு விலைகளில் பாண் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், இந்த சூழ்நிலையில் பாணை உட்கொள்வதை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது – நாங்கள் இன்னும் IMF நிபந்தனைகளுடன் இருக்கிறோம் – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

editor

4 நாட்களில் 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை

editor

யாழில் மீட்கப்பட்ட அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள்!