உள்நாடு

‘கோட்டா நாடு திரும்ப இது நல்ல தருணம் அல்ல’ – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பினால் அது நாட்டில் மேலும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என தமக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் இராஜினாமா

editor

மேல் மாகாணத்திலும் நில அதிர்வு அளவியை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.