உள்நாடு

கொவிட் 19 – 3,000 ஐ நெருங்குகிறது

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் 6 இலங்கையர்களுக்கு கொவிட் 19 (கொரோனா) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் மலேசியாவில் இருந்து வந்த இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,953 ஆக அதிகரித்துள்ள நிலையில், 136 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆனைவிழுந்தான் – ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் !