உலகம்சூடான செய்திகள் 1

கொவிட் 19 வைரஸ் -உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV|சீனா)- கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1868 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 93 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 1789 பேர் உயிழந்துள்ளனர்.

அதேநேரம் குறித்த தொற்றால் அங்கு 1807 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அந்த பிராந்தியத்தில் இதுவரை 59 ஆயிரத்து 989 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட் 19 தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 862 பேர் சிகிச்சைகளின் பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதாரர் விளக்கமறியல் காலம் நீடிப்பு