உள்நாடு

கொவிட் 19 : ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – ஜப்பானின் யோகோகமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசு கப்பலில் இலங்கையர்கள் இரண்டு பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த இருவரும் அந்த சொகுசு கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இக் கப்பலில் உள்ளவர்கள் 14 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பணிக்குழாம் உறுப்பினர்கள் தொடர்ந்தும் கப்பலில் தங்கியிருக்க வேண்டும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தற்போதைய ஆட்சியாளர்கள் தோல்வி அடைவது நிச்சயம் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

editor

வரக்காபொல மண்சரிவு : தாய் – மகன் மீட்பு

பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்