உள்நாடு

கொழும்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு, மோதரை, அளுத்மாவத்தை வீதியிலுள்ள பாலத்திற்கு அருகில் இருந்து நேற்று வியாழக்கிழமை (29) காலை வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயது மதிக்கத்தக்க வயோதிபப் பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண் வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்திருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா மரணங்கள் : 34 ஆக உயர்வு

அரசாங்கம் இன்னும் சர்வதேச நாணய நிதியம் சொல்லும் வார்த்தைக்கு ஆடுகிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா? மீண்டும் இனவாதத்தை தூண்ட முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor