சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|COLOMBO) நாளை காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் ஹோகந்தர பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதுடன், கொழும்பில் மேலும் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை மாகநகர சபைகளின் அதிகார பகுதிகள், மஹரகமை, பொரலஸ்கமுவ நகர சபையின் அதிகார பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபையின் அதிகார பகுதிகள், ரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது

சஜித் மன்னிப்பு கேட்டால் கட்சி மாற மாட்டேன் – வடிவேல் சுரேஷ்

எதிர்வரும் சில நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்…