சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|COLOMBO) நாளை மறுதினம் காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் ஹோகந்தர பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதுடன், கொழும்பில் மேலும் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை மாகநகர சபைகளின் அதிகார பகுதிகள், மஹரகமை, பொரலஸ்கமுவ நகர சபையின் அதிகார பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபையின் அதிகார பகுதிகள், ரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ள செல்பி புகைப்படம்…

இலங்கை ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கேன் வில்லியம்சன் (video)

இலங்கை-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கண்டியில் நூலகத்தை திறப்பு!