கொழும்பில் 5 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (13) இரவு 10.00 மணி முதல் நாளை (14) அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் முன்னெடுக்கப்படுமென சபை அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.
கொழும்பு 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் வழங்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.
