உள்நாடு

கொழும்பில் உள்ள சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகரில் சேவையாற்றும் சீன பிரஜைகள் 1000 பேருக்கும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் இன்றுடன் கொழும்பு நகரில் உள்ள அனைத்து சீன பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (06) இரண்டாவது நாளாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்று 1,083 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபையின் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தினூகா குருகே தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ரூ.2,000 கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

மூன்றாக பிளவடையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.