உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (29) மதியம்12 மணி முதல் நாளை (30) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலையிலிருந்து எலிஹவுஸ் வரை நீர் விநியோகம் செய்யும் நீர் குழாயில் அவசர மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ஹரக் கட்டாவை கொலை செய்ய சதி – பஸ்தேவாவுக்கு விளக்கமறியல்

editor

திருகோணமலையில் ஆரம்பமாகவுள்ள மாபெரும் நிகழ்வுகள்!

சில பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர்வெட்டு