உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே மின் ஆலையில் ஏற்பட்ட மின்சார செயலிழப்பு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொலன்னாவை நகர சபை பிரதேசம், மொரகஸ்முல்லை, ராஜகிரிய பிரதான வீதி மற்றும் ராஜகிரிய முதல் நாவலை வரையான அனைத்து கிளை வீதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மின்சார மறு சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று முதல் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

கடத்தப்பட்ட சாரதி பொலிஸாரிடம் தஞ்சம்!

5,00,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயன்ற மூவர் கைது!

editor