சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) – பிரதான நீர் குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு ஒன்றின் காரணமாக இன்றை தினம்(28) கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி மஹரமக மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உட்பட்ட பல பிரதேசங்களுக்கும், கொழும்பு 5 , 7 மற்றும் 8 பிரதேசங்களுக்கும் இன்று மாலை 3 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 3,4 , மற்றும் 6 பகுதிகளுக்கு குறைந்தளவிலான நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor

நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு