உள்நாடு

கொரோனா மரண எண்ணிக்கையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – கடந்த 31ம் திகதி பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகவில்லை என உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த 27 வயது இளைஞனின் மரணத்தை 22ஆவது கொரோனா மரணமாக கருத முடியாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 என்று தேசிய தொற்று நோயியல் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே தற்போது சுகாதார அமைச்சு குறித்த குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் உபகார சலுகை – ஜனாதிபதி பணிப்பு

ஐக்கிய இராச்சியத்தின் விசேட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்

editor