உள்நாடு

கொரோனா நோயாளிகளாக மேலும் ஐவர் அடையாளம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,464ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 473 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 1980 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் ஒரு கஷ்டமான யுகம் வந்தால் சஜித்தும் அனுரவும் ஓடிவிடுவார்கள் – ஜனாதிபதி ரணில்

editor

MV Xpress pearl : தீப்பரவலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவி

அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபு : சட்டமா அதிபரின் அறிவிப்பு