உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து திரும்பிய ஒருவரும், சேனபுர நிலையத்திலிருந்த ஒருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,838 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2,537 பேர் குணமடைந்துள்ளதுடன், தற்போது 290 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியில் கைதான 16 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

வெட்டுக்கிளிகள் தொடர்பில் தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இல