உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த குருநாகல், களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகராட்சி மன்ற பகுதி, குளியாப்பிடிய பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பொலிஸ் பிரிவு, இங்கிரிய பொலிஸ் பிரிவு, வேகட – மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு, மாவனெல்லை பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கடலில் வைத்து கைது

editor

வரக்காபொல மண்சரிவு : தாய் – மகன் மீட்பு

வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும் – தர்மரத்ன தேரர்.