உள்நாடு

கொரோனாவுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது.

சுகாதார பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வதுடன் மாணவர்கள் கைகளை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களை அழைத்துவரும் பெற்றோரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு பாடசாலைகளுக்கு சமூகமளித்ததை காணமுடிந்தது.

புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரணிலின் உடல்நிலையில் முன்னேற்றம் – சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டார் – அகில விராஜ் காரியவசம்

editor

நிறுத்தி வைக்கப்பட்ட மேலதிக வகுப்புகள் வழமைக்கு

குழுக்கள் பலவற்றின் தலைமை எதிர்க்கட்சிக்கு