உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு )- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(11) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 174 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 3,155 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம் – விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு – ரிஷாட்

editor

முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்ற ஆதிவாசிகள்!

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை