உள்நாடு

கொரோனாவிலிருந்து இதுவரை 2,789 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,789 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 118 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 2,918 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் முன்னாள் எம்.பி முருகேசு சந்திரகுமார

editor

கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைது

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை