கேளிக்கை

கொரோனாவிற்கு சவாலாக நித்யானந்தா

(UTV|இந்தியா) – கொரோனாவை ஒழிக்க நித்யானந்தா தனது காணொளியில் எளிய வழி ஒன்றை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகளவில் 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கும் பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை அழிக்க நித்தியானந்தா ஆலோசனை வழங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து இடைவிடாமல் ‘ஓம் நித்தியானந்த பரமசிவோகம்’ என, பிரார்த்தனை செய்தால் கொரோனாவை அழிக்க முடியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உலகப்புகழ் பெற்ற நீலப்பட நட்சத்திரம் மியா கலீஃபா மரணமா?

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள், காதலரை கை பிடிக்கிறார்

இளைய தளபதியை தொடர்ந்து உலக நாயகன்