உள்நாடுபிராந்தியம்

கொத்மலையில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸின் பாகங்கள் மீட்டெடுப்பு

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ்ஸின் பாகங்கள் பள்ளத்திலிருந்து மீட்டெடுத்து கொண்டுவரப்பட்டுள்ளன.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கிரேன் உதவியுடன் இந்தப் பேருந்தின் பாகங்களை மீட்டுள்ளனர்.

பின்னர் குறித்த பஸ்ஸின் பாகங்கள் மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

2 ஆம் நாளாக தொடரும் போராட்டம் – தையிட்டியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

editor

பிரிவினைவாத டாலர்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை