உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (03) காலை கைதுசெய்யப்பட்ட இரண்டு முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை ரயில் திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரமவும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

வெள்ள அனர்த்தம்: கொலன்னாவ,களனி மற்றும் அம்பத்தளை பிரதேசங்களுக்கு ஜனாதிபதி விஜயம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சி.ஐ.டி அழைப்பு!

editor