இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (05) கைது செய்யப்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர். ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு கொழும்பு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தத் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ளாமல் உற்சவ நடவடிக்கைகளுக்குச் செலவழித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு ரூ.2.76 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்த திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறையின் உறுப்பினராகச் செயல்படும் சந்தேக நபர், முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக நிதி ஒதுக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பாக ஆஜரான உதவிப் பணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு ஜூன் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.