அரசியல்உள்நாடு

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவுமில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் அது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முறையாக சமர்ப்பிக்கும் பட்சத்தில், அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தினால், டக்ளஸ் தேவானந்தாவிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

திட்டமிட்ட குற்றச் செயல்கள் கும்பலின் தலைவரான மாகந்துரே மதுஷ் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போதே, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.

Related posts

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 177 பேருக்கு PCR பரிசோதனை

திலினி – இசுறு விளக்கமறியலில்

கொழும்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது