உள்நாடுபிராந்தியம்

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் கடற்படையினர் ஈடுப்பட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதன்போது படகில் 250 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டதை அடுத்து, அதனை மீட்ட கடற்படையினர், படகில் இருந்த மூவரையும் கைது செய்ததுடன் படகையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, படகு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

14 ஆம் திகதி வரை டான் பிரியசாத் விளக்கமறியலில்

editor

இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

editor