உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை நேற்று (03) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு

வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பாக அறிவிப்பு

கோப் முதற் தடவையாக ஒன்லைன் முறையில்