உள்நாடு

குவைத்திலிருந்து 460 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்

(UTV|கொழும்பு)- பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைட்டில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் இன்று(19) முதல் ஆரம்பிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, குவைட் வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 460 இலங்கையர்கள் இன்று குவைத் எயார்வேஸ் இன் இரண்டு விமானங்களில் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

Related posts

மேலும் 16 பேர் பூரண குணம்

திருகோணமலை மாவட்டத்தில் EMS தபால் விற்பனை ஊக்குவிப்பு திட்டம்

editor

ஒட்சிசனுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது