உள்நாடு

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய, குறிப்பிட்ட வயதெல்லையை பூர்த்தி செய்துள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக , சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உத்திக பிரேமரத்னவின் ஜப்பான் விஜயம் குறித்து அறிக்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் – மேலும் இருவர் கைது

editor

முன்னாள் அமைச்சர் சந்திரசேன சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

editor