உள்நாடுவணிகம்

குளிரூட்டப்பட்ட தேங்காய் இறக்குமதியாகும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – நாட்டில் தேங்காய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்காக குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் முதலான நாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் பணிப்பாளர் பி எதிரிமான்ன தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேங்காய் உற்பத்தி குறைவடைந்தமையால், தற்போது நாட்டில் தேங்காய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை காரணமாக தேங்காய் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தான் நிரபராதி என மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா