உள்நாடு

குளவிக் கொட்டுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – ஹட்டன் டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளர்.

இன்று (25) முற்பகல் 10 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கலைந்து கொழுந்து பரித்துக்கொண்டிருந்தவர்கள் மீது கொட்டியத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண், மூன்று பிள்ளைகளின் தாயான ஹட்டன் தரவலை தோட்டத்தைச் சேர்ந்த  52 வயதான பெண்ணொருவராவார்.

மேலும் இச்சம்பவத்தில் 5 பெண்களும் இரு ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம்

ஐ.எஸ் நபர்கள் என கைதானோர் மதத் தீவிரவாதிகள் அல்ல – கமல் குணரத்ன

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம் தீர்ப்பு