உள்நாடுபிராந்தியம்

குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பூனகரி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில் நான்கு சிறுவர்கள் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.

தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் கிராமவாசிகள் ஒன்றிணைந்து குறித்த சிறுவனை தேடி நீண்ட நேரங்களின் பின் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டுள்ள சிறுவனின் சடலம் உடல் கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஜெபுரம் மற்றும் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

editor

அடுத்த சில நாட்களில் இலங்கையுடன் ஒப்பந்தம் பேச்சு: IMF

பாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor