உள்நாடுபிராந்தியம்

குருநாகலில் தீ விபத்து – ஒருவர் பலி

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்து குறித்து குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பலஸ்தீன மண்ணில் புத்தாடைக்கு பதிலாக இரத்த ஆடை அணிந்த படி வலி கொண்ட பெருநாளை அனுபவித்துக் கொண்டிருப்பதை கனத்த மனதுடன் ஞாபகப்படுத்தி உணர்வுகளால் பங்கு கொள்கிறேன் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் உதுமாலெப்பை எம்.பி

editor

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இராணுவ பொலிஸார் கடமையில்

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி