உள்நாடுபிராந்தியம்

குருக்கள்மட மனிதப் புதைகுழி பகுதியை பார்வையிட்ட நீதிவான்

குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிவான் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள் மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய வழக்கு விசாரணை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (11) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை நீதிவான் ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் சென்று பார்வையிட்டார்.

தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உரிய இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.

அங்கு புதைக்கப்பட்ட மனித எச்சங்களை அகழ்ந்து எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அவரது தலைமையில் உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டனர்.

குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Related posts

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

பெப்ரவரி 15 ஆம் திகதி வரை மின்சார கட்டண திருத்தம் அமுலில் இருக்கும்

அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை