உள்நாடு

குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள நடவடிக்கைகள் திங்கள் முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதருவோர் தமக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக 070 7101060 மற்றும் 070 7101070 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு மக்கள் தமக்கான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரிந்த வடக்கு கிழக்கில் இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் – கேள்வியெழுப்புகிறார் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்!

மேலும் 175 பேர் கொரோனாவுக்கு பலி

வீடியோ | இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் – நீதிக்கான மய்ய தலைவர் ஷஃபி எச். இஸ்மாயில்

editor