உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக அஸீம் நியமனம்!

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம். அஸீம், மாகாண ஆளுநர் பேராசிரியர் நந்தலால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் நேற்று திங்கட்கிழமை (15) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து, ஆளுநரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதையடுத்து அவர் தனது கடமைகளை நேற்று பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவியுயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம்.அஸீம், 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் அதனைத் தொடர்ந்து 2022 ஜனவரி முதல் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதன்போது சிறிது காலம் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

இவர் மருதமுனையை சேர்ந்த அஹமட் சிராஜுதீன் மற்றும் ஜஹ்புல் அறபியா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

சுழற்சி முறையில் இன்று மூன்று மணி நேர மின்வெட்டு

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்