உள்நாடுபிராந்தியம்

கிரிக்கெட் போட்டியின் போது கேச் பிடிக்க முயன்ற இருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் காயமடைந்து மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடைய, பளுகஹவெல, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு