வகைப்படுத்தப்படாத

கிண்ணியா பிரதேச பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் இயக்கம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட 66 பாடசாலைகளும் இன்று முதல் வழமை போல் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் ஏ.ம். அஹமட் லெப்பை இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் கிண்ணியாவில் டெங்குவின் தாக்கம் குறைவான போதிலும், கிண்ணியாவின் தளவைத்தியசாலையில் நேற்று முன்தினம் மட்டும் 84 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

අදත් ප්‍රදේශ කිහිපයකට ගිගුරුම් සහිත වැසි

தீர்வின்றி தொடரும் போராட்டங்கள்

කටුනායක ගුවන්තොටුපොළේ පාලන හා සැපයුම් කළමනාකරු ජනපති කොමිසමට