உள்நாடுபிராந்தியம்

கால்வாயில் இருந்து பெருந்தொகையான தோட்டாக்கள் மீட்பு

கெடலாவ கால்வாயின் படுகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கலன்பிந்துனுவெவ பொலிஸார் பெருந்தொகையான தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

5,038 T56 தோட்டாக்கள் கால்வாய்ப் படுகையில் புதைக்கப்பட்ட நிலையில், நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்வற்றியதால் அவை வெளியே தெரிந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

அப்பகுதியில் மேலும் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய மேலும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் கால்வாயில் வெடிபொருட்களைக் கொட்டியதற்குக் காரணமானவர்களை புலனாய்வாளர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை

Related posts

மூளைசாலிகள் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor

மக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறையாகும்

ஊரடங்கு சட்டத்தை மீறியதில் இதுவரை 265 பேர் கைது