மட்டக்களப்பு காத்தான்குடி ஆற்றங்கரை வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கும் விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் இன்று (15) கரையொதுங்கியுள்ளது.
குறித்த முதலை சுமார் 14 அடி நீளமுடைய ராட்சத முதலை என தெரிவித்ததோடு,மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த வருடம் சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்ததோடு ,15 அடி ராட்சத முதலையும் இறந்த நிலையில் காணப்பட்டது.
