உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலி

அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (09) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் கிரிந்த, ஒருகெம்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை வன விலங்குகளிடமிந்து பாதுகாப்பதற்காக தோட்டத்தில் தங்கியிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

கொரோனா நோயாளிகள் 8 பேர் பூரண குணம்

ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அழைப்பு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்