சீகிரியா மற்றும் கல்கமுவ பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழப்புகள் தொடர்பான சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து, காட்டு யானைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த வனவிலங்கு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு என்பன பொலிஸ் அதிரடிப் படை மற்றும் பொலிஸாரின் உதவியைக் கோரியுள்ளன.
யானை இறப்புகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ குற்றப் புலனாய்வுத் துறையின் உதவியையும், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில், திணைக்களம் கோரியுள்ளது.
திணைக்களத்தின் தகவல்களின்படி, சிகிரியாவின் திகம்பதஹ பகுதியில் முதல் யானை மரணம் பெப்ரவரி 3, 2025 அன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்புடைய வழக்கு தற்போது தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
பின்னர், அதே வனவிலங்கு காப்பகத்தில் மேலும் இரண்டு யானைகள் இறந்து காணப்பட்டன.
ஒரு தந்தம் அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் அந்தத் தந்தம் அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
கல்கமுவ, எஹெட்டுவெவ பகுதியில் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாத்தளை, அநுராதபுரம் மற்றும் குருணாகல் மாவட்டங்களின் சிகிரியா, கனேவல்பொல மற்றும் கல்கமுவ பகுதிகளிலும் யானைகள் இறப்புகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன.