சூடான செய்திகள் 1

காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்க ஆயத்தம்

(UTV|COLOMBO)  போதைப்பொருள் வர்த்தகரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் என்ற காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு செயலாளரின் அனுமதியை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

சந்தேக நபர், கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சன டி சில்வா முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக வழங்கப்பட்ட 90 நாட்கள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், இதற்கமைய மேலும் 90 நாட்கள் அவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த எதிர்பார்ப்பதாக கொழும்பு குற்றதடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’

இவைகளை ஏற்றுக்கொண்டதால் தான் சஜித்துக்கு நாம் ஆதரவு = விபரிக்கும் மனோ

குழப்பங்களை தீவிரமாக்குவதை ஹக்கீம் நிறுத்த வேண்டும். ஹக்கீமின் பத்வாவுக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதிலென்ன?