உள்நாடுபுகைப்படங்கள்

காசா நிதியத்திற்கு, 40 மில்லியனை வழங்கிய பேருவளை மக்கள்

பேருவளை, சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம், “ஜெம் ஸ்ரீலங்கா” சங்கம் மற்றும் சீனங்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன் காசா சிறுவர் நிதியத்திற்கு ரூ. 40,198,902 நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதற்கான காசோலை நேற்று புதன்கிழமை (21) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தக சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீலினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் பேருவளை பிரதேச வர்த்தகர்களும் கலந்துகொண்டனர்.

 

Related posts

ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியது

தனது தமிழ் வாக்குகளை பறிக்க சஜித் எடுத்த முயற்சி தோல்வி – ஜனாதிபதி ரணில்

editor

கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்