அரசியல்உள்நாடு

காசாவில் நிலைமை மோசம் – இலங்கை ஆழ்ந்த கவலை – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து அவ்வமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில்,

காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மேலும் நிலைமையை மோசமாக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது.

விரைவில் இப்பகுதியில் நிலையான அமைதி நிலைநாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றுள்ள

முன்னதாக, மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் காசா விடயம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உடன் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்!

மத, இன பதற்றத்தை உருவாக்க சில சக்திகள் முயற்சி : பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை