உள்நாடு

கவிஞர் அஹ்னாப் ஜசீம் பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) – பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 18 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞர் அஹ்னாப் ஜசீம் இன்று புத்தளம் மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம், கடந்த 2020 மே 20 அன்று பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதோடு, அதன்பின்னர் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் நிர்க்கதி நிலையிலுள்ள வேளையில் காக்கைகளும் மைனாக்களும் மீண்டும் எழ முயல்கின்றன-  சஜித் பிரேமதாச

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு