உள்நாடு

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீர்வெட்டு

(UTV |கொழும்பு) – களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று(12) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை-கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக, மு.ப 8.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணிவரை நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, நீர் வழங்கல் சபையின் களுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் வாத்துவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, மொரன்துடுவ, கட்டுக்குருந்த, நாகொட, தொடங்கொட, பிலமினாவத்த, தர்ஹா நகர், பெந்தொட்ட ஆகிய பகுதிகளுக்கே, நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

MSC Messina : இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் – முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால

editor

அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்குமான அறிவித்தல்